உயிர்மை வெளியீடாக பொங்கல் தினத்தன்று வா.மணிகண்டனின் "கண்ணாடியில் நகரும் வெயில்" கவிதைத் தொகுதி புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
ஜனவரி 15,2008 மாலை ஐந்து மணியளவில் உயிர்மை அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் எழுத்தாளர் சுஜாதா புத்தகத்தை வெளியிட, ரோகிணி பெற்றுக் கொண்டார்.
மனுஷ்ய புத்திரன் முன்னிலை வகிக்க, திரளான வாசகர்கள் பங்கெடுத்தனர்.