வா.மு.கோமுவின் எழுத்துக்கள் குதூகலமும் துணிச்சலும் கொண்ட மொழியால் வாழ்வை எதிர்கொள்பவை. அவரது முதல் நாவலான கள்ளியில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வும் மதீப்பீடுகளும் கனவுகளும் வெகு இயல்பாக தோற்றம் கொள்கின்றன.மத்தியதர கலாச்சார மதீப்பீடுகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியினையும் கடந்து, வா.மு.கோமு தமிழ் வாழ்வின் அறியப்படாத யதார்த்தம் ஒன்றினை இந்நாவலில் சித்தரிக்கிறார்.இந்த யதார்த்தம் சிலநேரம் அதிர்ச்சி அளிப்பது.சில நேரம் நம் அந்தரங்க முகத்தை திறந்து காட்டுவது;
ஒருபோதும் நாசூக்குகளின் வழியே எதையும் மூடி மறைக்காதது.
No comments:
Post a Comment